யாழில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மக்களின் 30 ஏக்கர் காணி விடுவிப்பு
நல்லாட்சி காலத்தில் யாப்பாணத்தில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்று(10.06.2023) அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
காணி விடுவிப்பு
இதேவேளை 33 ஆண்டுகளின் பின்னர் 40 பொதுமக்களுக்குச் சொந்தமான, சுமார் 30 ஏக்கர் காணியும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையுடன் இணைந்ததாக இராணுவத்தினரின் ஆயுத கிடங்கும் காணப்பட்டது.
நல்லாட்சி காலத்தில் ஜே/233 கிராம அலுவலர் பிரிவான காங்கேசன்துறை மேற்குப் பகுதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆயுத கிடங்கு காரணமாக அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் அகற்றப்படவில்லை. மேற்படி காணி இதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.
உத்தியோகபூர்வ தகவல்
கடந்த மாதம் ஆயுத கிடங்கை இராணுவத்தினர் இடமாற்றியுள்ளனர். இதனையடுத்து அதன் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்து இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள சுமார் 30 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
