புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுதலை
எல்லைத் தாண்டி சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை கடற்றொழிலாளர்களை இராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குறித்த 7 இலங்கை கடற்றொழிலாளர்களும் கடந்த 18 ஆம் திகதி இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடற்றொழிலாளர்களின் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
7 இலங்கை கடற்றொழிலாளர்கள்
இதன்போது குறித்த 7 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு கோரியதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் ஏழு பேரும் சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |