மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஹட்டனில் பேரணி
மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி நேற்று (02) அன்று ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது.
மலையக அறக்கட்டளை என்ற பெயரில் பல அரச சார்பற்ற அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
ஹட்டனில் பேரணி
ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் தொடங்கிய பேரணி, அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபம் வரை சென்றடைந்தது.
இதன்போது ஓரினச்சேர்க்கையாளர் சமூகமும் பேரணியில் இணைந்துக் கொண்டதோடு, பல தோட்டத் தொழிலாளர்களும் கலந்துக் கொண்டு நகர சபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளை வழங்குவதற்காக (01) அன்று இரண்டாவது முறையாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நுவரெலியாவிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.









ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
