இரண்டு பெண்களின் காதல் விவகாரம்! இலங்கை பெண்ணை தேடி வந்த இந்திய பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சமூக வலைத்தளம் ஊடாக இரண்டு வருடங்களுக்கு மேல் காதல் தொடர்பில் இருந்து வந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பெண்களில் ஒருவர் இலங்கையர் என்பதுடன் மற்றைய பெண் இந்தியாவை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த பெண்
தமிழகத்தை சேர்ந்த 24 வயதான பெண்ணும் அக்கரைப்பற்று பிரதேசத்தை 33 வயதான பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருக்கும் இந்திய பெண், தனது காதலியை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பணி சுமை காரணமாக இலங்கை பெண்ணுக்கு உடனடியாக கடவுச்சீட்டை பெற முடியவில்லை.
இதனால், இந்திய பெண் சுற்றுலா விசாவில் கடந்த 20 ஆம் திகதி இலங்கை வந்து, அக்கரைப்பற்றுக்கு சென்று இலங்கை பெண்ணினுடன் இரவு தங்கி இருந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் திருமணம் முடிந்து ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. இந்த பெண்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தொடர்பை எதிர்த்துள்ள பெண்ணின் தந்தை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் இரண்டு பெண்களையும் கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
தன்னை தனது காதலியுடன் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால், இவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் என இலங்கை பெண், விசாரணைகளின் போது,நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி நாளைய தினம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மனநல பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இலங்கையின் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளட்ட தரப்பினர் நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் பேரணி ஒன்றை நடத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...! 2 மணி நேரம் முன்

இலங்கை பொலிசார் மீது பிரித்தானிய இளம்பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு: வெளியாகியுள்ள வீடியோ... News Lankasri

ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் வெள்ளக்காடாகிய பிரான்ஸ் தலைநகரம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்! கைதான ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா முன்னிறுத்திய ஒரு தகவல் News Lankasri

வெளிநாட்டில் இருக்கும் சுஹாசினியின் மகனா இது? ஹீரோவையும் மிஞ்சி அழகு...இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? Manithan

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam
