கெஹலிய ரம்புக்வெல்லவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சிப் பதவியில் இருந்து நீக்கி சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடிதத்தினை மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் இணைந்து ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
தடுப்பூசிகள் இறக்குமதி
முன்னாள் சுகாதார அமைச்சரை தற்போதும் அமைச்சரவையில் தக்க வைத்திருப்பதானது, மக்களின் நம்பிக்கையை மீறும் செயலாகும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரமற்ற இம்னோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னால் சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri
