பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது : தேர்தல்களை ஒத்திவைக்க இடமளியோம் - சஜித் சூளுரை
இரண்டு பிரதான தேர்தல்களையும் ஒத்திவைக்க நாம் ஒருபோதும் இடமளியோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தேர்தலை எதிர்கொள்ள தயார்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe), ஐ.தே.க. - மொட்டுக் கட்சிகளும் தோல்விப் பயத்தில் ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சிக்கின்றன.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது.
அவரின் யோசனைக்கு நாட்டின் அரசமைப்பில் இடமேயில்லை. அரசமைப்பின் பிரகாரம் பிரதான இரண்டு தேர்தல்களையும் அரசு நடத்தியே தீர வேண்டும். இரண்டு தேர்தல்களையும் எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
