பசில் வகுக்கும் வியூகத்தில் நாம் வீறுகொண்டெழுவோம்!:மொட்டு கட்சி செயலாளர் சூளுரை
"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிநடை போட வைப்பதற்கான வியூகங்களை பசில் ராஜபக்ச தற்போது வகுத்து வருகின்றார். அந்தவகையில் விரைவில் வீறுகொண்டெழுவோம்."என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெற்றி வியூகம் வகுக்கப்பட்டும்

அவர் மேலும் கூறியதாவது,"அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை துறந்துவிட்டார். ஆனாலும், அரசியல் பயணம் தொடரும் என அறிவித்தார்.
அந்தவகையில் தற்போது வெற்றி வியூகம் வகுக்கப்பட்டு வருகின்றது. பலமான சக்தியாக எழுவோம். எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தனித்துப் போட்டியிடக்கூடிய வல்லமை எம் வசம் உள்ளது.
அதேபோன்று கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கும் பின்நிற்கப்போவதில்லை. மக்களின் தேவைப்பாடு அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்"என தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam