இஸ்ரோவுக்கு உயரிய விருது: சந்திரயான் - 3 விண்கலத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சந்திரயான் -3 விண்கலத்திற்கு “2023-லீப் எரிக்சன் லூனார்” என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கௌரவித்து குறித்த விருதை வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி அன்று உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான் -3 விண்கலம் ஏவப்பட்டது.
லீப் எரிக்சன் லூனார் விருது
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் திகதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி தமது ஆராய்ச்சிகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரோ நிறுவனத்தை கவுரவிக்கும் முகமாக 2023-லீப் எரிக்சன் லூனார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி விருதினை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
