மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேல் மாகாணத்தில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 473 தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காவல்துறையினர் மேல் மாகாணத்தில் உள்ள 2823 தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 2350 நிறுவனங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றமை தெரியவந்துள்ளது.
எனினும் 473 நிறுவனங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை கண்டறியப்பட்டது.
நிறுவனங்களுக்கு வருவோரின் வெப்பத்தை அளவிடாமை, கைகழுவுதல் வசதிகள் செய்யப்படாமை போன்றவை இதன்போது குறைகளாக கண்டறியப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam