அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு
இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார்.

தபால் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார கூறுகையில், தபால் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக தபால் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள 27,000இற்கும் அதிகமான தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri