கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக்கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்த துப்பாக்கிதாரி மீண்டும் நாடு திரும்பியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கிம்புலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக் கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இவர் இன்று (10) காலை 06.07 மணியளவில் சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா நீதிமன்றினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan