பத்மேவுடன் 5 நடிகைகள் மற்றும் பெண் சட்டத்தரணி தொடர்பு.. தீவிர விசாரணையில் புலனாய்வாளர்கள்
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் சட்டத்தரணி மற்றும் ஐந்து நடிகைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவியதாகக் கூறப்படும் பெண் சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
90-நாள் தடுப்புக்காவல்
இந்நிலையில், விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு இரண்டு கழுத்துப்பட்டைகள், ஒரு சட்டத்தரணியின் வாகன சின்ன ஸ்டிக்கர், தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் நகல்கள் மற்றும் போலி சட்டத்தரணி அடையாள அட்டையைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை அவர் வழங்கியதாக தெரியவந்துள்ளது.

எனவே, குறித்த சட்டத்தரணியை மேலும் விசாரிக்க 90-நாள் தடுப்புக்காவல் உத்தரவை குற்றப் புலனாய்வுத் துறை கோரியுள்ளது.
முக்கிய சந்தேக நபரான கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வெளிநாடுகளுக்குச் சென்ற ஐந்து நடிகைகளும், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் சட்டவிரோத ஆயுதக் கையாளுதல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டார்களா என்பதைத் தீர்மானிக்க விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri