இலங்கையில் கடுமையாகப்போகும் சட்டம் - போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
போதைப்பொருள் வர்த்தகர்களை பிணையின்றி தடுப்புக்காவலில் வைப்பதற்கான கடுமையான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
கொண்டுவரப்படவுள்ள திருத்தம்
இந்த நிலையில், அவர்கள் பிணையில் செல்ல கோரிக்கை விடுக்கும் போது, அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்பில் வைக்க முடியுமா என்பது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நச்சுப் பொருள் சட்டத் திருத்தத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இதேவேளை, குற்றச்செயல்களின் மூலம் பெற்றுக்கொண்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு அமைய, பொலிஸார் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |