தரைமட்டமாக்கப்பட்டுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லம்: வி.லவகுமார் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் நேற்று (25.11.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மன் நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்துவருகின்றது.
நிதியுதவிகள்
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோராகள் உறவுகளாகள் தொடர்ச்சியாக முழு வீச்சுடன் சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.தமது உறவுகளுக்கு நினைவேந்தலை செய்யவேண்டும் என்று ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றனர்.
இவ்வாறான பணிகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பாக தரவை துயிலும் இல்லத்தினை ஜேர்மன் நாடு பொறுப்பெடுத்து நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியொன்று வெளியாகியிருந்தது.
அவ்வாறான எந்த நிதியும் தரவை துயிலும் இல்லத்திற்கு கிடைக்கவில்லை.ஏற்பாட்டுக்குழுவான நாங்கள் உள்ள நிலையில் அவ்வாறான எந்த நிதியும் கிடைக்கவும் இல்லை நாங்கள் கையாளவுமில்லை.அது யாருக்கு அனுப்பப்பட்டது என்பது இதுவரையில் எங்களுக்கு தெரியாது.
புலம்பெயர் நாடுகள்
இவ்வாறான பொய்யான பரப்புரைகளை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று என்ன நடைபெறுகின்றதென மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது இவ்வாறான பொய்யான பரப்புரைகள் வரும்போது அவர்கள் நம்புவார்கள்.பொய்பிரச்சாரங்களை தயவுசெய்து முன்னெடுக்கவேண்டாம்.
இவ்வாறான பிரச்சாரங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தரவையில் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் ஒவ்வொரு மாவீரர் குடும்பமும் இணைந்து புலம்பெயர்ந்துள்ள மாவீரர்களின் சகோதரர்கள்,உறவினர்களும் இணைந்து இதனை செய்கின்றனர்.
இங்கு சொல்லப்படுகின்ற தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒரு குண்டூசி அளவுகூட உதவிகள் செய்யப்படவில்லை.
இன்று காலை நாங்கள் சென்று பார்த்தபோது குறித்த மேடை விசமிகளினால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இறந்தவர்களுக்கான நினைவேந்தலை செய்யலாம் என்று அறிவித்துள்ள காலத்தில் விசமிகள் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நினைவேந்தல் நிகழ்வு
நாளைய தினம் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அந்த நினைவேந்தலுக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.
உங்கள்
பிள்ளைகளின் தியாகம் ,அர்ப்பணிப்பினை நினைவுகூரும் இந்த நாளில் அவர்கள்
விதைக்கப்பட்டுள்ள இடத்தில் வந்து நினைவேந்தலை செய்வதற்கு இதுவொரு
நல்லதருணமாகும் என தெரிவித்துள்ளார்.