இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்களால் பெருந்தொகை வருமானம்
ஐரோப்பிய நாடுகளில் விவசாய மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் மூன்று அவுஸ்திரேலிய ஏர் டிராக்டர் AT-802 AT-802 விமானங்கள் இரத்மலானை, கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
கோடை காலத்தில் ஐரோப்பிய காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து துருக்கி செல்லும் வழியில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாக இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன் கீழ் (Air Tractor) AT-802 VH-JQW, மற்றும் VH-FZV, VH-CKS ஆகிய விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

விமானங்களால் கிடைக்கப்பெற்றுள்ள வருமானம்
இந்த விமானங்களுக்காக சர்வதேச விமானங்கள் இரத்மலானைக்கு வருகை தந்தமை நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாகவும் விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று விமானங்களின் வருமானம் 12,000 டொலர்கள் எனவும், இந்த விமானம் நாட்டில் ஒரு நாள் நிறுத்தப்படும் எனவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பல வர்த்தக விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தரவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri