தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள்
மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் இரு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்தே குறித்த படகுகளுடன் போதைப்பொருள் தொகையையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிப்படுகிறது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் ரகத்தை சேர்ந்தது என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் மற்றும் அவற்றில் பயணித்தவர்களை மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
