தனியார் காணியொன்றில் இருந்து மீட்கப்படும் பெருமளவான துப்பாக்கி ரவைகள்! (VIDEO)
கிளிநொச்சி - கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டன.
இது தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை (13) சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரு பெட்டிகளை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதி கிராம அலுவலர் கோணாமலை சேகர் முன்னிலையில் இன்று (15) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


