மலையகம் நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்; சுகாதார பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை
மலர்ந்துள்ள தை பொங்கல் தினத்தினை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மலையகம் நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
புகையிரத நிலைய அதிபர்கள் நேற்றைய தினம் திடீர் (13) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபபட்டதனால் கொழும்புக்கும், பிற நகரங்களுக்கும் தொழிலுக்காக சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில் சிரமங்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் (14) தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் ஊடாகவும்,பொது போக்குவரத்து ஊடாகவும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கோவிட் தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவி உலகை அச்சுறுத்திவருவதனால் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின் பற்றி தங்களையும், அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறும் மீண்டும் ஒரு முறை நாடு முடக்குவதற்கு இடமளிக்காது நடந்து கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தலைநகருக்கு தொழிலுக்காக சென்றவர்கள் தங்களது வீடுகளுக்கு பொங்கலை முன்னிட்டு திரும்புவதற்கு விசேட பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதே வேளை தொடர் விடுமுறை ஒன்று காணப்படுவதனால் சிவனொளிபாதமலையினை தரிசனம் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளி சுற்றுலா பிரயாணிகள் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
இவர்களின் நலன் கருதி ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்லதண்ணீர் வரை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 9 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
