மட்டக்களப்பில் விசேட முற்றுகை நடவடிக்கையில் மதுவரித் திணைக்களம் (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளில் பெருமளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 16 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை, வாகரை, செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவை தொடர்பில் 94 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் கூறியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் 16 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களும் பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கசிப்பு விற்பனை செய்த 47 பேருக்கும், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட
12 பேருக்கும் சட்டவிரோதமாக பியர் விற்பனை செய்த 11 பேருக்கும், சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த 04 பேருக்குமாக மொத்தம் 94 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam