இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் திடீர் பதவி விலகல்
இலங்கை சீனி நிறுவனத்தின் (Lanka Sugar Company (Pvt) Ltd) தலைவர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கு சமர்ப்பித்துள்ளார்.
பதவி விலகலுக்கான காரணம்
உள்ளூர் அரசியல்வாதிகளின் கடுமையான அழுத்தம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நிர்பந்திப்பதால் தனது கடமைகளை முறையாக நிறைவேற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனமாக, இலங்கை சீனி நிறுவனம் அரச கொள்கை அமுலாக்கல் திணைக்களத்தின் கடுமையான நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

தலைவர் உட்பட இயக்குநர்கள் குழு சட்டத்திற்கு முரணாக செயல்பட மறுத்ததால் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தொடர்ந்து மோதல்களுக்கு வழிவகுத்தது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam