சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் லங்கா சமசமாஜ கட்சியின் தகவல்
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாழும் உரிமையை உறுதி செய்தல், அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியனவற்றை உறுதி செய்வதனை முதன்மைப்படுத்தி ஆதரவளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
| சர்வகட்சி அரசில் இணையமாட்டோம்: ஜே.வி.பி. |
விரிவாக ஆராய்ந்த பின் தீர்மானம்

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானவர்கள் போதியளவு போசாக்கின்றி அவதியுறுவதாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உரிய நலன்கள் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

எரிவாயு, பாடசாலை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வறுமையில் வாடும் மக்களுக்கு வாராந்தம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
| சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்க வேண்டும்: ஜேவிபியையும் அழைக்கும் டலஸ் |
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri