தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு
லங்கா ஜனதா கட்சியை செயலிழக்கச் செய்யும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், பொதுத் தேர்தலில் போட்டியிட அந்த கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டுப் பூசல் காரணமாக லங்கா ஜனதா கட்சி செயலிழந்து பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்தல்கள் ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படவில்லை.
நீதி பேராணை
இந்தநிலையில், அக்கட்சியின் பொது செயலாளர் சாலிக்க பெரேரா இந்த தீர்மானத்தை எதிர்த்து நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றை செயற்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என அவர் வாதத்தை முன்வைத்திருந்தார்.
இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை செய்த பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான ஏ.எம்.டி நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இடைநிறுத்தி உத்தரவை பிறப்பித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan