மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் புதுப்பிப்பு
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
களுத்துறை மாவட்டம்- பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை, நுவரெலியா மாவட்டம்- அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம்- அயகம, பெல்மடுல்ல, கொடகவெல, எலபாத, கலவானை, இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை போன்ற பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாலச்சந்திரனை என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் பாதுகாத்திருப்பேன்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் உருக்கம்
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam