அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
இலங்கையின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு முன் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் கலவான மாவட்டச் செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, வடமேல் மாகாணத்தில் இன்று மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam