பதுளை உட்பட மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலும் மழை பெய்வதால் மண்சரிவு, பாறைகள் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அபாய மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, நீர்த்தேக்கங்கள், நிலச்சரிவுகள்,மலைகள் அல்லது செங்குத்தான பாறைகள்
உள்ள சூழலில் வசிக்கும் மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி
நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam