நாட்டில் மண்சரிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மற்றும் மொனராகல் மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை முன்னறிவிப்பு ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மொனராகல் மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இவ்வாறு மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam