மூதூர் கடலரிப்பால் மறையும் நிலங்கள்: தவிக்கும் கடலோர மக்கள் (Video)
திருகோணமலை - மூதூர் கடற் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களும் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் கருவாட்டு வாடி உற்பத்தியாளர்களின் பெறுமதியான தொழில் தளங்கள் கடலுக்கு இரையாவதோடு, பெறுமதியான அரச பொதுக்கட்டிடங்களும் நாளாந்தம் சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மூதூர் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, சுமார் இது வரைக்கும் 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் உட்புகுந்துள்ளதாக அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.
அண்மைக்காலமாக மூதூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால் அதனைத் தடுக்கும் ஆரம்ப தற்காலிக நடவடிக்கையாக முதன் முதலாகக் கடந்த 2003 காலப்பகுதியில் கரையோர பகுதிகளில் கற்கள் நிரப்பப்பட்ட கம்பியிலான கூடுகளில் கற்கள் இடப்பட்டு கடல் கரையிலிருந்து கரையினை நோக்கி 70 மீற்றர் வரையான பகுதிகளில் நிலத்தினை தோண்டி கற்கூடுகள் நிலத்தில் உள்ளீர்க்கப்பட்டது.
ஆனால் அது வெற்றியளிக்க வில்லை அது கடந்த சுனாமி அலைத் தாக்கத்தின் காரணமாக கற்கூடுகள் சேதமாக்கப்பட்டதோடு கடற்கரையின் வண்மையான தட்டுக்களும் அரிக்கப்பட்டதனாலும் ஒரே அடியாகக் கடற்கரையின் சுமார் 75 மீற்றர் தூரம் கடலுக்குள் உள்ளீர்க்கப்பட்டது.
இது இவ்வாறு தொடருமானால் மூதூர் கடற்கரையோரப் பிரதேசங்கள் பெரிதும் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்
வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
