கிளிநொச்சியில் இராணுவத்தினரால் காணி சுவீகரிப்பு: எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் (photos)
கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் அளவீடு செய்தபோது பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் இன்று (24.04.2023) பதிவாகியுள்ளது.
குறித்த காணி நேற்றும் இராணுவத்தினரால் அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காணி சுவீகரிப்பு
இந்நிலையில் நகரத்தின் முக்கிய தேவைகளுக்கு, காணிகள் தேவைப்படுகின்ற போதும் படையினர் காணியை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர் என எதிர்ப்பில் ஈடுபடும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் காணியை அளவீடு செய்து சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




