கொழும்பில் காணி வாங்கவுள்ளோருக்கான தகவல்! பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பில் காணிகளின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் காணி மதிப்பீட்டுச் சுட்டெண் வருடாந்தம் 17 வீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்ட காணிகளின் பெறுமதி மதிப்பீட்டுச் சுட்டி இந்த ஆண்டு முதல் அரையாண்டு பகுதியில் 186.9 என்னும் பெறுமதியை எட்டியுள்ளது.
குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை நில மதிப்பீடு ஆகிய மூன்று துணைக் குறியீடுகளின் அதிகரிப்பால் நில மதிப்பீட்டுக் குறியீட்டின் உயர்வு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கடந்த 2021ம் ஆண்டு வளர்ச்சி வீதத்துடன் ஒப்பீடு செய்யும் போது பின்னடைவை காண்பிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் - கமல்
அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளின் விலை
இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலை 45.17 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LankaPropertyWeb ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு விலைச் சுட்டெண்ணின் இரண்டாம் காலாண்டு (2Q) தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம், மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த கட்டுமான செலவுகளே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.