நீடிக்கும் மணல் கொள்ளை! நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்ட மக்கள்
வடமராட்சி உபயகதிர்காமம் பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் வயல்களில் உள்ள மண் கொள்ளையர்களால் களவாடப்படுகின்றது.
இந்த மண் திருட்டினை தடுத்து நிறுத்துமாறு பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் (M.A. Sumanthiran) கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அ.சுகிர்தன் (A.Sukirtan) ஆகியோர் அங்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இவ்வாறான மணல் கொள்ளைகள் வடக்கு மாகாணங்களில் அதிகமாக இடம்பெருவது குறிபிடத்தக்கது.