இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை! வெளியானது அறிவிப்பு
இலங்கையில் சொந்த காணிகள் மற்றும் வீடுகளுக்கான பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
'அனைவருக்கும் காணி' திட்டத்தின் கீழ் காணியற்ற குடும்பங்களுக்கு காணி உரிமையை வழங்கும் நிகழ்ச்சி பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை ஆரம்பமானது.
திட்டம் நடைமுறை
இத்திட்டமானது சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் காணிக்கான சட்டப்பூர்வ உரிமை இல்லாத சகலருக்கும் காணி உரிமையை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இன்று முதல் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காணிகளை இழந்தவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை
காணிகளை இழந்தவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் 1,000 முதல் 3,000 வரையிலான உறுதிப்பத்திரங்களை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக புத்தளம் மற்றும் குருநாகல் பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்று உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில், தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அதிகாரிகள் மற்றும் பத்திரப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
