வவுனியாவில் காணி வழங்குவதாக உறுதியளித்துள்ள திலீபன்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 650 ஏக்கர் வயல் காணியினை 650 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதியளித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (18.02.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பல நூறு ஏக்கர் காணிகள் விடுவித்துக் கொடுக்கப்பட்டிருந்தும் அதனை 15 பேர் மாத்திரமே செய்து வருகின்றனர்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
இந்த வயல் காணிகளை மீளப்பெற்று தலா ஒரு ஏக்கர் வீதம் காணியற்ற 650 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதனால், பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நெற் செய்கையில் ஈடுபட முடியும். இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச அதிபர், பிரதேச செயலாளர், கமநலசேவை திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
