அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்தது..! சாடும் முன்னாள் அமைச்சர்
அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்ததாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று(09.12.2025) தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு
அரசாங்கம் தன்னிச்சையாக பொய்களைச் சொல்லி மக்களை தவறாக வழிநடத்தியது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. 'பொய் சொல்லாதே, நிலம் விரிசல் அடையும்!' என்று நாங்கள் சொல்கிறோம். அதுதான் நடந்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் "பொய்கள் குறுகிய காலம் மட்டுமே" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தான் ஊழல் தடுப்பு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக அதுகோரல கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri