முல்லைத்தீவில் சுதந்திர தினத்தில் 75 பேருக்கு காணி அத்தாட்சி பத்திரங்கள் வழங்கி வைப்பு(Photos)
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின விழா இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின விழா புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
75 குடும்பங்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டுள்ளார்.
இந்த 75 ஆவது சுதந்திர தின விழாவின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 75 குடும்பங்களுக்கு காணி அத்தாட்சி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.