பொத்துவில் கனகர் கிராம மக்களின் நில மீட்பு போராட்டம்! காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்

in public!
By Independent Writer Mar 03, 2021 06:54 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் மக்கள் பாரிய சவால்களையும், தேவைகளையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகிறார்கள்.அவற்றிலொன்று தான் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டமாகும்.

இவர்களது போராட்டம் 922 நாட்களைக் கடந்துள்ளது. நாளை இடம்பெறவுள்ள பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் காலகாலமாக வாழ்ந்து வந்த காணியை மீட்டுத் தருவதற்கான நியாயப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போராட்டக் குழுவின் தலைவி றங்கத்தனா, உறுப்பினர் ராசா ஆகியோர் மிகவும் உருக்கமாக தமது போராட்டம் இவ்வாறு 922 நாட்களையும் தாண்டி இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் விளக்கமாகக் கூறினர்.


அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ஆம் கட்டை ஊறணி எனுமிடத்தில் கனகர் கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப் போராட்டம் தொடங்கி 922 ஆவது நாட்களைக் கடந்து நகர்கின்றது .

அவர்கள் கடந்த2018.08.14ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. 1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களைக் கடந்த 30 வருடங்களாக அங்கு வனபரிபாலன இலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும். தற்போது அரச தரப்பில் நல்லெண்ண சமிக்ஞைகள் கிடைத்துள்ளது.

எது எப்படியிருந்த போதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடு மண்டிக் காணப்படுகின்றது. அந்தக் காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன.கூடவே அவர்கள் பாவித்த மலசலக்கூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன.அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.

இது தொடர்பாகப் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில்,

தாங்கள் வாழ்ந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப் பட வேண்டும் என நீண்ட காலமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்களுக்குக் குடியமர்த்தப் படும் விடயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எம்மை சந்தித்த மக்கள் என்னிடம் கூறிய போது ஆரம்பத்தில் எவ்வாறு குடியமர்த்தப்பட்டோமோ அந்த அடிப்படையில் எமக்குக் காணிகள் வழங்கப்பட வேண்டுமென்றும், இங்கு வாழ்ந்த அனைவரும் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு இருக்கின்றனர். இது நியாயபூர்வமானது .

இம்மக்கள் குடியமர்த்தப்பட வேண்டுமென்று இறுதிக் கட்ட வேலைப்பாடுகளுக்கு நாம் வந்துள்ளோம் . கட்சி பேதமின்றி அரசியல் பிரமுகர்கள் , தன்னார்வலர்கள் எனப் பலரும் கனகர் கிராம மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர்.

யுத்த சூழலால் இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வறுமையாக இருக்கின்றார்கள். நாட்கூலியாக இருக்கின்ற மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது . அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் எனில் வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் , பொத்துவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சமூகம் தந்திருந்தனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US