தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உரிமத்தை ரத்து செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை
இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்யுமாறு விவசாய கால்நடை வள மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவிடம் இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளார்.
குறித்த தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வழங்குதல் தொடர்பான நிபந்தனைகளை மீறி செயல்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடக அமைச்சினூடாக வழங்கப்படும் உரிமைத்திற்கு மேலதிகமாக இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்கமைக்கும் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் ஒளிபரப்பு அலைவரிசை உரிம நிபந்தனைகளை மீறி உள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அலைவரிசைக்கு எதிராக உரிய நடவடிக்க எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
குறித்த தனியார் ஊடகம் தம்மைப் பற்றி போலியானதும் வெறுப்புணர்வுவைத் தூண்டும் வகையிலும் குறித்த ஊடகம் செய்திகளை வெளியிடுவதாக ஊடக அமைச்சிடம், அமைச்சர் லால்காந்த முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri