நாடாளுமன்ற வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கும் மற்றுமொரு அரசியல்வாதி
76 வயதாகும் எதிர்கட்சியின் மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella), தனது 36 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்
அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அலி சப்ரி, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே போன்றோரும் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்துள்ளனர்
பல தசாப்தகால அரசியல்
இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரது மகள் கண்டி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்துமாறு செய்தியாளர்கள், லக்ஷ்மன் கிரியெல்லயிடம் கேட்ட போது, இந்த விடயம் இன்று வெளிப்படுத்தப்படும் என்று பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
