இலங்கையின் கல்வியியலாளர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு
பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியதுடன், வயம்பா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், இளைஞர்களுக்கான ஜனாதிபதி ஆணையத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் மேம்பட்ட தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய கல்வி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும், தேசிய நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
மேலும், இவர் வணிக மேலாண்மை மற்றும் தேசிய கல்வி ஆணையத்தின் தலைவர் என்பதுடன் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவராக, பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக இலங்கையின் கல்வி சீர்திருத்தத்தில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
