விஜயதாச ராஜபக்சவுக்கு இழப்பீடு செலுத்த முடியாமல் சிக்கலில் மாறியுள்ள லேக்ஹவுஸ்
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லேக்ஹவுஸ் நிறுவனம் 1300 மில்லியன் ரூபாய் (ரூ. 130 கோடி) இழப்பீடு செலுத்த வேண்டியுள்ள நிலையில், நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கியுள்ளது.
இந்த இழப்பீட்டை செலுத்த நிறுவனத்திடம் போதுமான பணம் இல்லாததே நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.
இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடு செலுத்தும் திறன் நிறுவனத்திடம் இல்லை என அதன் தலைவர் காமினி வருஷமான ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலைமை குறித்து நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, விஜயதாச ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
12 சதவீத வட்டி
விஜயதாச ராஜபக்சவை அவதூறு செய்ததாக 2009ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு விஜயதாச ராஜபக்சவிற்கு 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு 2013இல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த இழப்பீடு ஆண்டுக்கு 12 சதவீத வட்டி என்ற விகிதத்தில் தற்போது 1300 மில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025