ஜனாதிபதி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை: காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் அதிருப்தி
2025 ஒக்டோபர் 27 ஆம் திகதியான நாளைய தினம், சீதுவை, ரத்தொலுவவில் உள்ள காணாமல்போனோருக்கான நினைவுச்சின்னத்தில் நடைபெறவிருந்த காணாமல்போனோருக்கான 35வது ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு இன்னமும் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்து மௌனம் காத்து வருவது குறித்து காணாமல்போனோர் குடும்பங்கள் மத்தியில் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு, ஒக்டோபர் 13 மற்றும் ஒக்டோபர் 21 ஆகிய திகதிகளில் பல எழுத்துப்பூர்வ அழைப்புகள் அனுப்பப்பட்டன.

அமைதியான போராட்டம்
எனினும் ஜனாதிபதி இதற்கு பதிலளிக்கவில்லை. நிகழ்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவோ அல்லது 1989 தெற்கில் இடம்பெற்ற வன்முறை மற்றும் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போனவர்களின் குடும்பங்களைச் சந்திக்க திகதியையோ வழங்கவோ இல்லை என்று ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இந்த குடும்ப உறுப்பினர்களின் கண்ணீரைத் துடைப்பதாக தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

எனினும்,தொடர்ந்து அவர் மௌனம் காத்து வருவது விரக்தியையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளதாக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, நீதி அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே அமைதியான போராட்டத்தை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025