காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(24) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
காத்தான்குடி, அப்றார் நகர் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி நெடுஞ்சாலை வீதி வழியாக மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போதே கல்லடி பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் போது உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
