நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தின பேரணி

Batticaloa Jaffna Trincomalee Vavuniya
By Independent Writer May 02, 2026 07:58 AM GMT
Report

யாழ்ப்பாணம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டமானது நேற்றையதினம்(1) இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்தே இந்த மே தின கூட்டமானது நடாத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தின பேரணி | Labor Day Rally And Meeting North

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான ப.கஜதீபன், ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி-கஜிந்தன்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

கிளிநொச்சி 

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் நேற்றையதினம்(1) சிறப்பாக இடம்பெற்றது.

 சமத்துவக் கட்சியின் பூநகரி தெற்கு பிரதேச அமைப்பாளர் குபேந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கட்சியினுடைய பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவனேசன், கடற்தொழில் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ். பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் இராஜதுரை, மத குருமார்கள் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தின பேரணி | Labor Day Rally And Meeting North

 இந்தக் கூட்டத்தில் கட்சியினுடைய பிரதேச அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி தேவந்தன்

தையிட்டியை வைத்து அரசியலை தக்கவைக்க முயற்சிக்கும் வடக்கு தலைவர்கள்! அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தையிட்டியை வைத்து அரசியலை தக்கவைக்க முயற்சிக்கும் வடக்கு தலைவர்கள்! அமைச்சர் பிமல் ரத்நாயக்க

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ்  தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் நேற்று(1) இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலமானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மட்டு காந்தி பூங்காவைச் சென்றடையந்தது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தின பேரணி | Labor Day Rally And Meeting North

பின்னர் மே தின கூட்டம் இடம்பெற்றது. இந்த தொழிலாளர் தின பேரணியில் தொழிலாளர்களது உரிமைகள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தி சென்றனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதேச அமைப்பாளர்கள், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

செய்தி-ருசாத்

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வவுனியா

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ''ஜனநாயக மக்கள் அதிகாரம்'' என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணி நிகழ்வும் மே தின கூட்டமும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்புடன் நேற்றையதினம்(1) வவுனியாவில் இடம்பெற்றது.

வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குரிய பிரதான நிகழ்வாக பெருமளவிலான மக்கள் கூட்டத்துடன் இது இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக ஆரமபித்த தொழிலாளர் தின ஊர்வலமானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று பசார் ஊடாக ஹெரவப்பொத்தானை வீதி, மன்னார் வீதி என்பவற்றின் ஊடாக கலைமகள் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த பின்னர் மே தின கூட்டம் இடம் பெற்றது.

விழிப்புணர்வு 

இந்த தொழிலாளர் தின விழிப்புணர்வு பேரணியில் தொழிலாளர்களது உரிமைகள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தி சென்றனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தின பேரணி | Labor Day Rally And Meeting North

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேச அமைப்பாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளமக்கிய பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி-வசந்தரூபன்

மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்..! வெளிவந்துள்ள தகவல்

மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்..! வெளிவந்துள்ள தகவல்

திருகோணமலை

இலங்கை தமிழரசு கட்சியின் மே தின நிகழ்வு திருகோணமலை- ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் நேற்றையதினம்(1) இடம்பெற்றது.

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை மாநகர சபை மேயர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தின பேரணி | Labor Day Rally And Meeting North

நடை பவணியாக ஊர்வலமாக சென்று தொழிலாளர் தினத்தை வெளிப்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.

இதில் சுமார் 1000 நபர்கள் பேரணியில் கலந்து கொண்டு தொழிலாளர் தினத்தை சிறப்பித்தனர்.

செய்தி-ஹஸ்பர்

அநுரவின் ஆட்டம் ஆரம்பம் !! மே மாதத்தின் பின் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்

அநுரவின் ஆட்டம் ஆரம்பம் !! மே மாதத்தின் பின் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்

தலவாக்கலை

வீடோ ரோடோ மலையகத்தின் விதியை மாற்றாது உண்மையான கல்வியே மலையகத்தை மாற்றும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் மேதினம் தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக காலம் காலமாக மேதின கூட்டங்களை பார்த்திருப்பீர்கள். அதில் சோறும் பொதியும் சாரயமும் வழங்கினார்களே தவிர மாற்றம் எதும் நடைபெறவில்லை.

வீடு என்பதும் வீதி என்பதும் எமக்கு முக்கியமானது தான் ஆனால் அவை அனைத்தையும் விட கல்வி முக்கியமானது.

எனவே இன்று அரசியல் செய்பவர்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் நான் அப்படியல்ல. இவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் இங்கிருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US