குவைத் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு
நிர்வாகத்தைப் பொறுப்பேற்று, சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் குவைத் பிரதமர் பதவி விலகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் 85 வயதான ஆட்சியாளர் எமிர் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மகனான பிரதம மந்திரி ஷேக் அகமது நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து உருவாக்கப்பட்ட மூன்றாவது அரசாங்கம் இதுவாகும். அமைச்சரவை இரண்டு முக்கிய விடயங்களில் நாடாளுமன்றத்துடன் முரண்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்
இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும், குவைத் நாட்டினரின்
கடன்களை இரத்துச் செய்வதும் ஆகிய இரண்டு விடயங்களில் நாடாளுமன்றம் ஒப்புதல்
வழங்கியது.
எனினும் அமைச்சரவை இந்த இரண்டு யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam