குருந்தூர் ரஜமகா விகாரை விவகாரம் - விசேட பொலிஸ் பாதுகாப்பு கோரும் நிர்வாகம்
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சு கலந்துரையாடி முடிவை அறிவித்துள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
கோயிலிலிருந்து அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி, அதன் தலைமைப் பொறுப்பாளர் கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் ஹினிடும சுனில் செனவி, கோயிலுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைப் பொறுப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.