குமுழமுனை குன்றில் குமரன் கோவிலில் ஆரம்பமான வருடாந்த உற்சவத் திருவிழா
முல்லைத்தீவு குமுழமுனையில் உள்ள குன்றில் குமரன் கோவிலின் பத்துநாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
பக்கதர்களின் புடைசூழலுடன் 15.03.2024 அன்று ஆரம்ப நிகழ்வுகள் தொடங்கியதிலிருந்து இனிவரும் பத்துநாட்களும் திருவிழா பூசைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காலையிலும் அபிசேக ஆராதனைகள் நடைபெற்று வருவதோடு மாலையிலும் சிறப்பு பூசைவழிபாடுகளுடன் ஆலய வெளி வீதி உலாக்களும் நடைபெற்று வருகின்றது.
நண்பகல் பூசை
அதற்கமைய, வருடாந்த திருவிழா பூசைகள் இந்த வருடமும் பெரும் முன்னெடுப்புக்களுடன் ஆரம்பித்துள்ளன.
அத்துடன், நண்பகல் பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |