பிணையில் அனுமதிக்கப்பட்ட குடு சலிந்துவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணை
நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், "குடு சலிந்து" என்று அழைக்கப்படும் சாலிந்து மல்சிக்க குணரத்னவை கைது செய்ய பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த வாரம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அவர் நேற்று குற்றப்புலனாய்வுத்துறையில் முன்னிலையாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடியாணை
இன்று அவர்கள் இந்த விடயத்தை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், உண்மைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், குணரத்னவை கைது செய்வதற்கான பிடியாணையை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக அவர் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அத்துடன் பாணந்துறை நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட பின்னர், அவர் சொகுசு வாகனத்தில் ஆதரவாளர்களுடன் சென்றமை குறித்து ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam