பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடு அஞ்சுவை நாட்டிற்கு அனுப்புவது கடினம் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அரசியல் அகதிகளுக்கான ஓப்ரா என்ற அமைப்பில் அவர் பதிவு செய்யப்பட்டுள்ளமையே அதற்கு காரணமாகும். அஞ்சு ஒரு பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் பரிஸில் உள்ள இன்டர்போல் பொலிஸார் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அஞ்சு

அஞ்சுவின் சார்பில் உயர்மட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையாகி வருவதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரை இலங்கைக்கு அனுப்பினால் கொன்று விடுவார்கள் என கூறி அந்த சட்டத்தரணிகள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பிரான்ஸ் பொலிஸார் நேற்று அஞ்சுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam