10 ரூபாவால் அதிகரிக்கும் கொத்து ரொட்டியும் பாணும்
இலங்கையில் கொத்துரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
நாளை திங்கட்கிழமை முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன்படி கொத்து ரொட்டி 10 ரூபாவாலும், சிற்றுண்டிகளான முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி, ரோல்ஸ் போன்றவற்றின் விலை 5ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை பாணின் விலையும் இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கையி்ல் ஏற்கனவே பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri