10 ரூபாவால் அதிகரிக்கும் கொத்து ரொட்டியும் பாணும்
இலங்கையில் கொத்துரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
நாளை திங்கட்கிழமை முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன்படி கொத்து ரொட்டி 10 ரூபாவாலும், சிற்றுண்டிகளான முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி, ரோல்ஸ் போன்றவற்றின் விலை 5ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை பாணின் விலையும் இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கையி்ல் ஏற்கனவே பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam