கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு! சிக்கிய முக்கிய ஆதாரம்..
கொட்டாஞ்சேனை 16வது ஒழுங்கையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றையதினம்(7) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
இதன்போது, ஒருவர் காயமடைந்துடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த நபரை சொகுசு காரில் வந்த ஒரு குழுவினர் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை கைவிட்டுவிட்டு துப்பாக்கிதாரிகள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த கார் தற்பொழுது கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

