கொழும்பு பொலிஸ் நிலையமொன்றில் துப்பாக்கி மாயம்: விசாரணை தீவிரம்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸாரின் கைதுப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளுக்கான பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
விசேட பொலிஸ் குழு விசாரணை
இந்நிலையில், காணாமல் போன குறித்த துப்பாக்கி, அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக உரிய புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை கண்டறியும் முகமாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய நேற்று (27.09.2023) கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு விசேட பொலிஸ் குழுவொன்று விஜயம் செய்து விசேட விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
