கொழும்பு பொலிஸ் நிலையமொன்றில் துப்பாக்கி மாயம்: விசாரணை தீவிரம்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸாரின் கைதுப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளுக்கான பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
விசேட பொலிஸ் குழு விசாரணை
இந்நிலையில், காணாமல் போன குறித்த துப்பாக்கி, அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக உரிய புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை கண்டறியும் முகமாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய நேற்று (27.09.2023) கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு விசேட பொலிஸ் குழுவொன்று விஜயம் செய்து விசேட விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri